மும்பை: இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியாக இருந்தாலும் நவீன இந்தியாவின் தேசத் தந்தை பிரதமர் மோடி என்று மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் மனைவி புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். மிகவும் பிரபலமான இவர், பல்வேறு விழாக்களில் அதிகம் கலந்து கொள்வார். குறிப்பாக, இந்திய போர்க்கப்பலை பார்வையிட்ட போது, கப்பலின் ஓரத்தில் பாதுகாப்பு எதுவுமின்றி புகைப்படம் எடுத்த சம்பவத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானார்.
இந்தநிலையில், இந்தியாவின் தேசத்தந்தை தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டிருப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
அவர் பேசியதாவது :- நமது நாட்டிற்கு இரு தேச தந்தைகள் இருக்கிறார்கள். நமது நாட்டிற்கு தேச தந்தை என்றால் அது மஹாத்மா காந்தி. அதே போல, புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என இந்தியாவுக்கு 2 தேச தந்தைகள் இருக்கிறார்கள், என கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.