பிரியாணிக்காக 18 வயது வாலிபரை . 60 முறை தொண்டையில் கத்தியால் குத்தி கொன்ற சிறுவன் : பிணம் மீது ஏறி டான்ஸ்.. ஷாக் சிசிடிவி!!!
வடகிழக்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இரவு சுமார் 11.15 மணியளவில் 18 வயதுடைய வாலிபர் ஒருவர் வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் இறந்துகிடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ரத்தவெள்ளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகள் கிடைத்துள்ளன.
சிசிடிவி காட்சிகளில், 18 வயதுடைய வாலிபரை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி இழுத்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. மேலும் அந்த வாலிபர் இறந்ததை உறுதிசெய்ய அவரது கழுத்தில் சிறுவன் பலமுறை குத்தியதுடன், ஒருகட்டத்தில் அந்த சடலத்தின் மீது ஏறி நின்று நடனம் ஆடியுள்ளான்.
வாலிபரிடம் இருந்த பணத்தைத் திருடும்போது தடுத்ததே கொலைக்கான காரணம் என்று கூறப்படுகிறது. அவர் இறந்தபிறகு அவர் வைத்திருந்த ரூ.350 ரூபாயை எடுத்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவனிடம் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது சிறுவன் போதையில் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் சிறுவன், கடந்த ஆண்டு ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.