ஆந்திரா: வயிற்றுப் பிழைப்புக்காக குவைத்திற்கு வேலைக்கு சென்று பாலைவனத்தில் சிக்கித் தவித்த ஆந்திர தொழிலாளி சிவாவை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள ராயலப்பாடு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவா ஏஜென்ட் ஒருவர் மூலம் ஆடு மேய்க்க தொழில் செய்ய குவைத்துக்கு சென்றிருந்தார். அவரை அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பாலைவனம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ஷெட்டில் அடைத்து வைத்த குவைத் முதலாளி அங்கிருக்கும் ஆடுகள், வாத்துக்கள் ஆகியவற்றை பார்த்து கொள்ளும் வேலையை ஒப்படைத்து இருந்தார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பேச்சு துணைக்கு கூட யாரும் இல்லாமல் பாலைவனத்தின் நடுவே சிக்கி தவித்த சிவா தன்னுடைய நிலை பற்றி வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோ வேகமாக பரவி ஊடகங்கள் மூலம் ஆந்திர அரசின் காதுகளுக்கு எட்டியது.
அவரை விரைவில் மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று ஆந்திர அமைச்சரும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆன நாரா லோக்கேஷ் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தெலுங்கு தேசம் கட்சியின் வெளிமாநில அணியினர் அவரை தொடர்பு கொண்டு குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்டு தூதரகத்திற்கு அழைத்து வந்து பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில், அவர் அங்கிருந்து விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இன்று மதியம் சொந்த ஊரை அடைந்தார். அவரை மீட்க உதவிய அனைவருக்கும் அவரும் அவரது குடும்பத்தாரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.