ஆந்திரா : விசா கிடைக்காத காரணத்தினால் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கில் ஒளிபரப்பு செய்து திருமணத்தை கண்ட பெற்றோர் மணமக்களை வாழ்த்தினர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பர்வத ரெடி ஜோதி தம்பதியினரின் மகன் ரோஹித் ரெட்டி (வயது 23). இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் திருப்பதி நாயுடு பேட்டையைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி சுனிதா தம்பதியினரின் மகள் ரிஷிதா (வயது 21) என்பருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அமெரிக்காவில் அமெரிக்க நேரப்படி மே 21 தேதியும் இந்திய நேரப்படி 22 தேதி திருமணம் நடைபெற இருந்தது.
அமெரிக்கா சென்று திருமணத்தில் கலந்துகொள்ள மணமக்கள் பெற்றோர் விசாவுக்காக விண்ணப்பித்த நிலையில் விசா கிடைக்காத காரணத்தினால் திருமணத்தில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நாயுடு பேட்டை பகுதியில் அமைந்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய திரையரங்கம் என்றும் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கம் ஆக கருதப்படும் வி செல்லுலாயிட் நிறுவனத்தின் வி ஏபிக் திரையரங்கத்தை திருமண நிகழ்ச்சியை காண முன்பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை மணமக்கள் மணக்கோலத்தில் மணமேடைக்கு வந்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டும் காட்சிகள் அமெரிக்காவிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திரையில் ஒளிபரப்பப்பட்டது.
மணமக்களின் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் திருமணத்தை திரையில் கண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த மிகப்பெரிய திரையரங்க திருமண நிகழ்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.