ஆந்திரா : விசா கிடைக்காத காரணத்தினால் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கில் ஒளிபரப்பு செய்து திருமணத்தை கண்ட பெற்றோர் மணமக்களை வாழ்த்தினர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பர்வத ரெடி ஜோதி தம்பதியினரின் மகன் ரோஹித் ரெட்டி (வயது 23). இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் திருப்பதி நாயுடு பேட்டையைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி சுனிதா தம்பதியினரின் மகள் ரிஷிதா (வயது 21) என்பருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அமெரிக்காவில் அமெரிக்க நேரப்படி மே 21 தேதியும் இந்திய நேரப்படி 22 தேதி திருமணம் நடைபெற இருந்தது.
அமெரிக்கா சென்று திருமணத்தில் கலந்துகொள்ள மணமக்கள் பெற்றோர் விசாவுக்காக விண்ணப்பித்த நிலையில் விசா கிடைக்காத காரணத்தினால் திருமணத்தில் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நாயுடு பேட்டை பகுதியில் அமைந்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய திரையரங்கம் என்றும் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கம் ஆக கருதப்படும் வி செல்லுலாயிட் நிறுவனத்தின் வி ஏபிக் திரையரங்கத்தை திருமண நிகழ்ச்சியை காண முன்பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை மணமக்கள் மணக்கோலத்தில் மணமேடைக்கு வந்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டும் காட்சிகள் அமெரிக்காவிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திரையில் ஒளிபரப்பப்பட்டது.
மணமக்களின் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் திருமணத்தை திரையில் கண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த மிகப்பெரிய திரையரங்க திருமண நிகழ்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.