திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் குதித்த வாலிபர் சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான வனவிலங்குகளை பராமரித்து வருகின்றனர். இந்த வனவிலங்கு பூங்காவிற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளாக வருவது வழக்கம்.
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மட்டும் அல்லாது தனிப்பட்ட முறையில் அங்கு வருபவர்களும் உள்ளனர். இன்று மாலை பூங்காவில் சிங்கங்களை பராமரிக்கும் பகுதிக்குள் திடீரென்று ஏறி குதித்த ஒரு நபரை அந்த பகுதியில் உலாவிய சிங்கம் ஒன்று தாக்கி கடித்த குதறியது.
இதனை அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து சத்தம் போட்டு சிங்கத்தை விரட்ட முயன்றனர். ஆனால், அதற்குள் அவரை சிங்கம் கடித்து குதறி கொன்றுவிட்டது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் சிங்கத்தை அங்கிருந்து கூண்டுக்குள் விரட்டிவிட்டு அவருடைய உடலை மீட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த திருப்பதி போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவருடைய பெயர் பிரகலாத குப்தா என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
அவர் தனியாக வந்தாரா அல்லது அவருடன் வேறு யாராவது வந்திருக்கிறார்களா? எதற்காக அவர் சிங்கங்கள் வசிக்கும் பகுதிக்குள் இறங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.