ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஏரிகள் நிரம்பி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக தெலங்கானாவில் மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
பல கிராமங்கள் வெள்ளநீரால் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்
குறிப்பாக விஜயவாடாவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அதிக அளவில் மழை பெய்து இருப்பதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இதற்கிடையே மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை மீட்பதற்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தென் மத்திய ரயில்வே 9 ரயில்களை வெவ்வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது .
6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம், கேசமுத்திரம் மண்டலம் தல்லபூசப்பள்ளி ரயில் நிலையம் அருகே மழை வெள்ளத்தால் ரயில்வே தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மஹபூபாபாத்தில் நிறுத்தப்பட்டது,பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.