நெருங்கும் தேர்தல்.. பட்ஜெட் தாக்கல் : நாட்டு மக்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்? எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!
மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வுக்கு முன்னர் பாரம்பரியமாக செய்யப்படும் “அல்வா” சமைத்தல் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், பட்ஜெட்டின் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, நாளை (ஜனவரி 30ஆம் தேதி) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஏப்ரல்-மே மாதங்களில் எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, மத்திய பாஜக அரசின் கடைசி கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ம் தேதி தொடங்கி பிப். 9ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது. ஜனவரி 31-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற இடைக்கால மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.