இந்தியாவில் 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்களா? CM ஸ்டாலினுக்கு எந்த இடம் தெரியுமா? வெளியான பட்டியல்!!

இந்தியாவில் 28 மாநிலங்கள் டெல்லி புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் உள்ள 30 முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை தவிர்த்து மீதமுள்ள 30 முதலமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தப் பட்டியலில் சொத்து மதிப்பில் முதலிடத்தில் உள்ளவர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இவருக்கு ரூ.510 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

2வது இடத்தில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளார். அவருக்கு ரூ.163 கோடி சொத்துகள் உள்ளது.

3வது இடத்தில், ஒடிசாவின் நவீன் பட்நாயக் ரூ.63 கோடி சொத்துகளுடன் உள்ளார். 4வது இடத்தில் நாகலாந்து முதல்வர் ரூ.46 கோடி சொத்துக்களுடனும், 5வது இடத்தில் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ரூ.38 கோடி சொத்துக்களுடனும் உள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 6வது இடத்திலும் (ரூ.23 கோடி), சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் 7வது இடத்திலும் (ரூ.23 கோடி), அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா 8வது இடத்திலும் (ரூ.17 கோடி), மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா 9வது இடத்திலும் (ரூ.14 கோடி), திரிபுரா முதல்வர் மாணிக் சகா 10வது இடத்திலும் (ரூ.13 கோடி) அடுத்தடுத்து உள்ளனர்.

இந்தப் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.8 கோடி சொத்துக்களுடன் 14வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.

ஆனால், இந்தப் பட்டியலில் வெறும் லட்சாதிபதியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார். அவரிடம், ரூ.15 லட்சத்திற்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகத் தெர்விக்கப்பட்டுள்ளது.

இவரை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்களாக இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் பாஜகவைச் சேர்ந்த 11 முதல்வர்கள் கோடிஸ்வரர்களாக உள்ளனர்.

அந்த வரிசையில் பார்த்தால், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.163 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

2வது இடத்தில் அசாம் முதல்வரும் (ரூ.17 கோடி), 3வது இடத்தில் திரிபுரா முதல்வரும் (ரூ.13 கோடி) உள்ளனர். கோவா முதல்வர் ரூ.9 கோடி சொத்துக்களுடனும், கர்நாடகா மற்றும் குஜராத் முதல்வர்கள் ரூ.8 கோடி சொத்துக்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும், தற்போதுள்ள 30 முதல்வர்களில் 13 பேர் (43%) மீது கடும் குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குற்ற வழக்குகள் என்பது 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத தண்டனையுடன் கூடிய ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் தொடர்புடைய வழக்குகள் என ஏடிஆர் தெரிவித்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…

2 hours ago

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

2 hours ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

3 hours ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

3 hours ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

3 hours ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

4 hours ago

This website uses cookies.