ஆந்திரா : ஏலூர் அருகே ஒய்எஸ்ஆர் காங்., பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில்
ஆறுதல் சொல்ல சென்ற ஆளும் கட்சி எம்எல்ஏ.க்கு தர்ம அடி கொடுத்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் , ஏலூர் மாவட் டம் , துவாரகா திருமலை மண்டலத்தில் உள்ள ஜி.கோட்டப்பள்ளி கிராம தலைவர் கஞ்சி பிரசாத். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான அவர் , நேற்று முன்தினம் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் .
இந்த நிலையில் நேற்று காலை கஞ்சி பிரசாத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ஆளும் கட் சியை சேர்ந்த கோபாலபுரம் எம்எல்ஏ தலாரி வெங்கட்ராவையும் அவருடன் பாதுகாப்புக்காக சென்ற போலீசாரையும் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சரமாரியாக தாக்கினர் . இதில் எம்எல்ஏ படுகாயமடைந்தார் .
இதையடுத்து எம்எல்ஏ.வின் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர் . கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தியவர்களும், ஒய்எஸ்ஆர் கட் சியை சேர்ந்தவர்கள்தான் என தெரிய வந்துள்ளது. கஞ்சி பிரசாத்திற்கு எதிரான கோஷ்டியை எம்எல்ஏ வெங்கட்ராவ் ஊக்குவித்து வந்ததாகவும், அவர்கள்தான் பிரசாத்தை கொன்றதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரம் கிராமத்தில் உள்ள ஒருகடையை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது . இந்நிலையில் கொலை செய்ததாக குற்றவாளிகள் சிலர் போலீசில் சரணடைந்து உள்ளனர் .
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.