தெலங்கானா: செகந்திராபாத்தில் உள்ள மர கிடங்கு விற்பனை கடையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 11 தொழிலாளர்கள் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள போயகுண்டா பகுதியில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
நேற்று வேலை முடிந்த பின் வழக்கம் போல் அவர்கள் கடைக்கு உள்ளே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். இன்று அதிகாலையில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையில் பழைய மரங்களும் இருந்தன. மின்கசிவு காரணமாக ஏற்பட்டது என்று கருதப்படும் தீ மளமளவென்று பரவி கடை முழுவதும் பற்றி எரிய துவங்கியது.
12 பேர் கடைக்கு தூங்கி கொண்டிருந்த நிலையில் அவர்களில் 11 பேர் உயிருடன் எரிந்து சாம்பலாகி விட்டனர். ஒருவருக்கு தீவிர காயங்களுடன் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீ விபத்து பற்றி தகவல் அறிந்த செகந்திராபாத் தீயணைப்பு படையினர் 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அதற்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.