மீண்டும் 3வது முறையாக இன்று பந்த்…. வாட்டாள் நாகராஜ் எடுத்த அதிரடி முடிவு : தமிழக கர்நாடக எல்லையில் பரபரப்பு!!

மீண்டும் 3வது முறையாக இன்று பந்த்…. வாட்டாள் நாகராஜ் எடுத்த அதிரடி முடிவு : தமிழக கர்நாடக எல்லையில் பரபரப்பு!!

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி விவகாரத்தில் தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய நீரைத் தராமல் கர்நாடகா தொடர்ந்து பிரச்சினை செய்தே வருகிறது.

கர்நாடகாவில் அளவுக்கு அதிகமாக மழை பெய்தால் மட்டுமே நீரைத் திறந்துவிடுவதைக் கர்நாடக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. இந்தாண்டும் கூட நீரைத் தரக் கர்நாடகா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால் நீரைத் தர முடியாது என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள டெல்டா விவசாயிகள் அச்சமடைந்தனர். இருப்பினும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்கி வருகிறது.

வரும் அக். 15ஆம் தேதி வரை காவிரி ஆறு மூலம் தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு இருக்கிறது. அதன்படி நீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், இதற்கு அங்குள்ள கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்குத் தரப்படும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கூறி அங்குள்ள அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் கடந்த மாதம் ஏற்கனவே அவர்கள் இரண்டு முறை பந்த் கூட நடத்திவிட்டனர். இந்தச் சூழலில் இன்றைய தினம் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் பந்த் நடத்தப்பட உள்ளது.

கர்நாடகா-தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் இந்த பந்த் நடத்தப்பட உள்ளதாக அங்குள்ள கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று எல்லை மாவட்டங்களில் பந்த் போராட்டம் நடைபெற உள்ளது. மேலும் அவர்கள் பெங்களூரு ஹோஸ்கோட் சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்தும் போராட்டம் நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கேஆர்எஸ் அணையை முற்றுகையிடவும் வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

13 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

15 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

15 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

16 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

17 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

17 hours ago

This website uses cookies.