கேரளா மாநிலம் காசர்கோட்டில் தனியார் விடுதியில் பெண் அழகு கலை நிபுணர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உடுமாபாரா என்னும் பகுதியை சார்ந்தவர் 34 வயதான அழகு கலை நிபுணரான தேவிகா. இவருக்கு திருமணம் ஆகி கணவனும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதுபோல, காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிக்கானம் என்னும் பகுதியை சார்ந்தவர் சதீஷ். இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை மதியம் 2 மணி அளவில் காதலியான தேவிகாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காதலன் சதீஷ் ஆவூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த செவ்வாய் கிழமை அன்று காஞ்ஞங்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஒன்றில் சந்தித்த இருவரும் அறையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக காதலன் சதீஷ் தேவிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்பு காவல் நிலையத்தில் சென்று தான் கொலை செய்ததாகவும் சரணடைந்தார். தொடர்ந்து, போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சதீஷ்க்கும் திருமணம் ஆனதும், அதுபோல தேவிகாவுக்கு திருமணமானதும் தெரியவந்துள்ளது. அதுபோல இருவரும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தகாத உறவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதனிடையே, தான் சதீஷின் குழந்தையை பார்த்த பிடித்துப் போன தேவிகா – சதீஷிடம் அவரது மகளை தனக்கு தந்துவிட கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதமும் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், தான் இருவரும் தனியார் விடுதியில் சந்தித்துக் கொண்ட பின்பு குழந்தையை வேண்டும் என மீண்டும் அடம்பிடிக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சதீஷ் பொறுமை இழந்து அறையில் இருந்த கத்தியை எடுத்து, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தன்னை வாழ விடவில்லை தனது குழந்தையை கேட்டு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார். அதை தாங்க முடியாமல் தான் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து தனியார் விடுதியில் சென்று ஆய்வு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காதலன் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்ததுடன் இதுவரை குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தகாத உறவால் நாளுக்கு நாள் கேரளாவில் தொடரும் கொலையின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.