அழகான மனைவி… தீராத சந்தேகம் : யூடியூபை பார்த்து கொலை செய்த சிஆர்பிஎஃப் வீரர்!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பங்காரம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த தடுதூரி அனுஷா (22) என்பவருக்கும் நக்கா ஜெகதீஷ் (30) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஜெகதீஷ் சி ஆர் பி எப் வீரராக விசாகப்பட்டினத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மனைவி அனுஷா திருமணத்திற்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த பிரசாத்துடன் பழகி வந்ததை அறிந்த ஜெகதீஷ் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 16ஆம் தேதி இரவு 11 மணியளவில் அனுஷா கழுத்தில் நைலான் கயிற்றால் இறுக்கி கொன்றார். பின்னர் அனுஷா போனில் இருந்து அனுஷாவின் தந்தை, மூத்த சகோதரர், நண்பர் மற்றும் கணவர் (ஜெகதீஷ்) ஆகியோருக்கு அவரது பிரசாத் தன்னை தெரிந்து போன் செய்து தொல்லை தருவதாகவும் அதனால் தான் தற்கொலை செய்வதாக மெசேஜ் அனுப்பினார்.

இதனால் அனுஷா குடும்பத்தினர் பிரசாத்தின் வீட்டை தாக்க சென்றனர். இதனால் பிரசாத் குடும்பத்தினர் டயல் 100க்கு போன் செய்து புகார் அளித்தனர். எஸ்.ஐ மகேஷ் மற்றும் போலீசார் உடனடியாக கிராமத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள மாட்டு தொழுவம் அருகே அனுஷாவின் சடலம் கிடந்தது. உடனே போலீசார் பிரசாத்தை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அனுஷாவுக்கும் பிரசாத்துக்கும் இடையே ஒரு வருடமாக எந்தவித உரையாடல் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

அனுஷா அனுப்பிய மெசேஜ் ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு சென்றது எப்படி என விசாரித்தனர். அப்போது கணவரிடம் விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது.

போலீசார் விசாரனையில் ஜெகதீஸ் கூறுகையில் தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், அனுஷாவை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டதாகவும் பிரசாத் குறித்து தெரிந்ததால் அப்போது முதல் அவருக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு கொலை செய்ய ஒரு வாரத்திற்கு முன் கிராமத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.

வந்தவுடன் மனைவியை அழைத்துக்கொண்டு விஜயநகரம் மற்றும் பல இடங்களில் சுற்றியுள்ளார். பின்னர் வேலையில் இருந்து அழைப்பு வந்ததாக கூறி அனுஷாவை வீட்டுக்கு அனுப்பினார்.

பின்னர் விசாகப்பட்டினத்தில் சென்ற ஜெகதீஸ் அங்கிருந்து இம்மாதம் 16ம் தேதி இரவு பங்காரம்மாபேட்டை கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்து வெளியே வருமாறு மனைவி அனுஷா அழைத்து அவரது நடத்தை குறித்து கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் மனம் உடைந்த அனுஷா வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி யுடுயூப்பில் தடயம் இல்லாமல் கொலை செய்வது எப்படி என பார்த்து அதற்கேற்ப பாக்கெட்டில் வைத்து கொண்டு வந்த நைலான் கயிற்றை அனுஷா கழுத்தில் இறுக்கி மூச்சு விடமுடியாமல் கொன்றதாக கூறினார்.
அதன் பின்னர் ஏற்கனவே தன் செல்போனில் டைப் செய்து வைத்திருந்த மெசேஜை அனுஷா போனில் காப்பி பேஸ்ட் செய்து ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு அனுப்பினான்.

இதற்காக மூன்று நாட்களுக்கு முன்பு பழைய செல்போனை அகற்றிவிட்டு தனது பெயரில் புதிய சிம்கார்டை வாங்கி அனுப்பி உள்ளார்.

போலீசார் செல்போன் டவர் ஆதாரமாக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்தனர். இதனையடுத்து ஜெகதீஷ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாக பொப்பிலி டிஎஸ்பி சீனிவாச ராவ் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

13 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

14 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

15 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

15 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

15 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

16 hours ago

This website uses cookies.