பிச்சையா எடுக்குற? 1 ரூபாய்க்காக நண்பன் கொலை.. பிரியாணியால் வந்த வினை : அதிர்ச்சி சம்பவம்!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மில்ஸ் காலனி கரீப்நகர் கோர்ரெகுண்டாவை சேர்ந்த இசம்பள்ளி பிரேம்சாகர் (38) ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் காந்திநகரில் உள்ள நபி பிரியாணி கடையில் ₹ .59க்கு சிக்கன் பிரியாணி வழங்கும் கடைக்கு பிரேம்சாகர் சென்றார்.

அதே நேரத்தில் காந்திநகரை சேர்ந்த ஜன்னு அரவிந்த் அங்கு வந்தார். இருவரும் நண்பர்கள் ஆவார் இந்நிலையில் பிரேம்சாகர் பிரியாணிக்கு போன்பே மூலம் ₹.59க்கு பதிலாக ₹.60 செலுத்தினார்.

இதற்கு பக்கத்தில் நின்றிருந்த அரவிந்த் நீயே ஒரு ஆட்டோடிரைவர் கூடுதலாக பிரியாணிக்கு ₹ 1 தருகிறாயே அவ்வளவு பெரிய ஆலாகி விட்டாயா என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே நடந்த சிறு சண்டையால் கோபமடைந்த பிரேம்சாகர் நான் என்ன பிச்சை எடுக்கிறேனா?’ என்று கூறிக்கொண்டே அரவிந்த் தனது கால்களால் பிரேம்சாகரை எட்டி உதைத்தார்.

இதில் பிரேம்சாகர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது சாலையில் இருந்த கல் பிரேம்சாகர் தலையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டு சிறுமூளையில் அடிப்பட்டு மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வழிந்து அவர் சுயநினைவை இழந்தார்.

அதே நேரத்தில் அங்கு வந்த பிரேம்சாகரின் தம்பி வித்யாசாகருடன் அரவிந்த் பிரேம்சாகரை ஆட்டோவில் வாரங்கல் எம்ஜிஎம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 1 மணியளவில் பிரேம்சாகர் இறந்தார். இதனையடுத்து அரவிந்த் உடனடியாக மருத்துவமனையில் இருந்து நேரடியாக மில்ஸ் காலனி காவல் நிலையத்திற்கு போலீசில் சரணடைந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மல்லையா கூறுகையில், இறந்தவரின் சகோதரர் வித்யாசாகர் அளித்த புகாரின் பேரில் அரவிந்த் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

48 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

4 hours ago

This website uses cookies.