திருமணத்திற்கு மறுத்த பெண்ணை காதலன் கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகவின் முருகேஷ்பால்யா பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹெல்த்கேர் நிறுவனத்தில் லீலா என்ற எம்.எஸ்.சி பட்டதாரி பெண் பணியாற்றி வந்தார். இதேபோல, மற்றொரு தனியார் ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தினகர். இவரும், லீலாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தினகரை காதலிப்பது தொடர்பாக லீலா அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது, சாதியை காரணம் காட்டி அவர்கள் இருவரின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆவேசம் அடைந்த தினகர், நேற்று மாலை 7.30 மணியளவில், வழக்கம் போல் பணி முடித்து வெளியே வந்த லீலாவை, தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். கழுத்து, மார்பு, வயிறு என சரமாரியாக குத்தியதால் லீலா ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதையடுத்து, தினகர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லீலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் லீலா உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.