என்ஜினியர் வீட்டில் திடீர் ரெய்டு… கட்டு கட்டாக கிடந்த பணமும், நகைகளும்… மிரண்டு போன அதிகாரிகள்..!!

Author: Babu Lakshmanan
27 August 2022, 4:27 pm
Quick Share

ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் என்ஜினியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் பணமும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பீகாரின் கிஷன்கன்ஜ் டிவிசனில் நிர்வாக பொறியாளராக இருப்பவர் சஞ்சய் குமார் ராய். இளநிலை பொறியாளரான இவர், அலுவலகத்தில் உள்ள காசாளர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்ற நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாட்னாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள கட்டுகட்டான பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு, பல சொத்து ஆவணங்களும் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். பணத்தை எண்ணுவதற்காக ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சஞ்சய் குமார் ராய் தொடர்புடைய வீடுகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் ரூ.4 கோடி ரொக்கம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 414

0

0