தோட்டத்தில் விளையாடிய சிறுவர்களை துப்பாக்கியால் சுட முயற்சி : அமைச்சரின் மகனுக்கு தர்ம அடி!!

பீகார் மாநில அமைச்சரின் மகன் தனக்கு சொந்தமான நிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் நாராயண் பிரசாத். இவரது மகன் பப்லு பிரசாத். இந்த நிலையில் பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்டியா கிராமத்தில் நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலத்தில் சிறுவர்கள், குழந்தைகள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.இதனை பார்த்த அமைச்சரின் மகன் பப்லு பிரசாத் ஆத்திரம் அடைந்தார். அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை இங்கு இருந்து செல்லும்படி அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அவர் சிறுவர்களிடம் கடுமையாக பேசியதால் சிறுவர்களுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அமைச்சரின் மகன் உள்ளூர்வாசிகள் சிலரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு விளையாடிய குழந்தைகளை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் சிலர் காயம் அடைந்தனர் எனவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அமைச்சர் நாராயண் பிரசாத் வீட்டுக்குச் சென்று, அவரது காரை அடித்து நொறுக்கினார்கள். அவரது மகன் பப்லுவை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

KavinKumar

Recent Posts

ச்சீ இப்படி ஒரு வைத்தியமா? காயத்திற்கு மருந்தாக தன்னுடைய சிறுநீரை தானே குடித்த சூர்யா பட நடிகர்!

சூர்யா பட வில்லன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்…

5 hours ago

கழுத்தை நெறித்து 3 வயது குழந்தை கொலை.. விசாரணையில் சிக்கிய தாய் : கடைசியில் டுவிஸ்ட்!

திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும்…

6 hours ago

விடாது கருப்போட காப்பியா? சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டிலால் எழுந்த சந்தேகம்?

90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர் 1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க…

6 hours ago

பாகிஸ்தானுக்கு உதவாதீங்க; கம்முனு இருங்க- நெட்டிசன்களை பார்த்து எச்சரிக்கும் ராஜமௌலி

ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…

8 hours ago

சினிமாவை விட்டு விலகமாட்டேன்.. கர்ப்பம் ஆனால் கூட… டாப் நடிகை!

சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…

8 hours ago

ராயல் சல்யூட்… பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…

9 hours ago

This website uses cookies.