ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் கதிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கர்நாடக அரசு பேருந்து மீது மோதியதில் பைக்கில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர்.
விபத்து நடைபெற்ற போது அரசு பேருந்து மீது மோதிய மோட்டார் சைக்கிள் பேருந்தின் அடியில் சிக்கி கொண்டது. எனவே அதில் பயணித்த இரண்டு பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மூலகலச்செருவு மண்டலம் கோனேடிவாரி பள்ளியை சேர்ந்த கிருஷ்ணப்பா (வயது 45) மற்றும் நீர்கட்டிப்பள்ளியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 27) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
This website uses cookies.