திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒருநாள் உண்டியல் காணிக்கை வருமானத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடு காலத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏழுமலையானை தரிசிக்க தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கடந்த மூன்றாண்டுகளுக்கு பின் திருப்பதி,திருமலை ஆகிய ஊர்கள் பக்தர்கள் வருகை காரணமாக மீண்டும் களைகட்ட துவங்கி உள்ளன.
இந்த நிலையில் நேற்று 56,559 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு கோவில் உண்டியலில் 5 கோடியே 41 லட்சம் ரூபாயை ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்தனர். மேலும் 22,751 பக்தர்கள் தலைமுடி சமர்பித்து மொட்டை போட்டு கொண்டனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழுமலையானுக்கு கிடைத்த ஒருநாள் உண்டியல் காணிக்கை வருமானத்தில் நேற்றைய காணிக்கை வருமானம் அதிக தொகை கொண்டதாக அமைந்துள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.