பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவர் ரஞ்சித் ஸ்ரீநிவாஸ். இவரை கடந்த 2021ம் ஆண்டு சில மர்ம நபர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 8 பேர் நேரடியாக இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் என்றும், 7 பேர் மறைமுகமாக தொடர்பில் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டது.
இது தொடர்பான வழக்கு மவேலிக்கரா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 15 பேருக்கான தண்டனை விபரங்களை மவேலிக்கரா நீதிமன்றம் வெளியிட்டது. இந்த வழக்கின் விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.