உத்தரபிரதேசத்தின் சம்பாலைச் சேர்ந்த 34 வயதான பாஜக தலைவர் அனுஜ் சவுத்ரி, டெல்லி சாலையில் அமைந்துள்ள மொராதாபாத்தின் பார்ஷ்வநாத் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தனது சகோதரருடன் நடைபயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போழுது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சவுத்ரியின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மொராதாபாத்தில் உள்ள பிரைட்ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சவுத்ரி இறந்த செய்தி பரவியதும், எஸ்எஸ்பி ஹேம்ராஜ் மீனா உட்பட அனைத்து போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், குற்றவாளிகளைத் தேடும் பணியை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பிடிப்பதற்கு ஐந்து போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.