பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியான அரசியலை செய்து வருகிறார். எதிர்கட்சியான திமுகவை மட்டுமல்லாது, கூட்டணியான அதிமுகவுடனும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். ஜெயலலிதா, அண்ணா குறித்து அவர் பேசியது அதிமுகவினரிடையே பொறுமையை இழக்கச் செய்தது. இருதரப்பினரும் பகிரங்கமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இருப்பினும், தன்னுடைய கருத்தில் இருந்து அண்ணாமலை பின்வாங்கவில்லை.
ஒருகட்டத்தில் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக அறிவிப்பை வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024ல் மட்டுமல்ல 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை இரு கட்சியினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், பாஜக தேசிய தலைமை இதனை விரும்பவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், அதிமுக – பாஜக முறிவுக்கு பின் முதல்முறையாக அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது, அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து அண்ணாமலையிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தமிழகத்தில் அதிமுக கூட்டணி முறிவு ஏற்பட்டது பாஜக தேசிய தலைமைக்கு அதிருப்தியையே ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் சுமூகமான முடிவை ஏற்படுத்தி, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருப்பதாகவும், இதன் காரணமாக, அண்ணாமலையிடம் இருந்து சில அதிகாரங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் இடஒதுக்கீடு விவகாரங்களில் அண்ணாமலையை ஒதுங்கி இருக்கச் செய்ய இருப்பதாகவும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லியிலேயே குழு அமைக்கவும் பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், அண்ணாமலை தமிழகம் வந்த பிறகே தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.