குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு, ஒடிசாவில் கோவில் ஒன்றில் துடைப்பத்தால் தூய்மை செய்த பிறகு தரிசனம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் அடுத்த மாதம் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகளுக்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்தவரும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவது முதல்முறையாகும்.
குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திரவுபதி முர்முவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒடிசாவில் உள்ள ராய்ரங்பூர் ஜகன்னாதர் கோயிலுக்கு வழிபாடு செய்ய திரவுபதி முர்மு சென்றார். அப்போது, கோயில் வளாகத்தைத் துடைப்பத்தால் சுத்தம் செய்த அவர், கோயில் மணியை அடித்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அங்கிருந்த நந்தி சிலையை ஆர கட்டித் தழுவினார்.
குடியரசு தலைவர் வேட்பாளராக இருந்தாலும் துடைப்பத்தால் தூய்மை செய்து தரிசனம் செய்த திரவுபதி முர்முவின் எளிமை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.