ஆந்திரா : பிரதமரின் ஆந்திர பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்படும் விதமாக காங்கிரசார் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத் சமீபத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இரண்டு நாட்களாக கலந்து கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திராவிற்கு வந்தார்.
விஜயவாடா அருகில் உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பீமவரம் சென்று அல்லூரி சீதாராமராஜூ பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.
கன்னவரம் விமான நிலையம் அருகில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள் பிரதமர், ஆந்திர முதல்வர் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் கான்வாய் பாதையில் சென்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செயல் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் நடத்தப்பட்ட பெரும் குளறுபடியாக கருதப்படுகிறது.
எனவே பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இது பற்றி விசாரணை நடத்துவார்கள் என்று ஆந்திர பாஜக தலைவர் சோமுவீர ராஜு கூறியுள்ளார்.
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.