Categories: இந்தியா

கண்ணாடி உரசியதால் ஏற்பட்ட மோதல்.. 1 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு ஓட்டுனர் துடிக்க துடிக்க கொலை..!

பெங்களூரில் இருந்து விஜயவாடா நோக்கி சென்ற இரண்டு தனியார் பேருந்து கண்ணாடிகள் உரசியால் டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

சித்தூர் அருகே டோல்கேட்டில் ஒரு பேருந்து டிரைவர் மற்றொரு பேருந்து முன்பு நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது பேருந்து இயக்கி ஒரு கிலோமீட்டர் இழுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் விஜயவாடா அய்யப்பா நகர் என்மலக்கு வீதியை
சேர்ந்த சீனிவாசராவ் ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் பஸ்சில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இதேபோல் குண்டூர் மாவட்டம் செப்ரோலு மண்டலம் பழைய ரெட்டிபாலம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் ராஜு ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் பஸ்சில் டிரைவராக பணி புரிந்து கடந்த ஒரு வாரம் முன்பு பொன்னூரில் குடிபெயர்ந்து மார்னிங் ஸ்டார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

இந்த இரண்டு பஸ்களும் நேற்று இரவு பெங்களூரில் இருந்து விஜயவாடா நோக்கி புறப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து போட்டியிடும் ஓட்டி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்காருபாலம் அருகே இரண்டு பஸ்களின் சைடு கண்ணாடி உரைவு ஏற்பட்டது. இதனால் இரண்டு டிரைவர்களும் பஸ்சை ஓட்டி கொண்டே வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அதே நேரத்தில் மகாசமுத்திரம் டோல்கேட் அருகே இரண்டு பஸ்களும் வெவ்வேறு லைனில் வந்த போது மார்னிங் ஸ்டார் டிரைவர் சுகாதகர் ராஜு கீழே இறங்கி ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் பஸ் முன்பு நின்று வாக்குவாதம் செய்தார். இதனால், கோபமடைந்த டிரைவர் சீனிவாசராவ் பஸ்சை முன்னோக்கி ஓட்டி சென்றார்.

இதில், பஸ்சின் அடியில் சிக்கி கொண்டு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதில் மார்னிங் ஸ்டார் பஸ் டிரைவர் சுதாகர் ராஜு இறந்தார். டோல்கேட் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் பஸ்சை நிறுத்தி டிரைவர் சீனிவாசராவை கைது செய்தனர். ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்தினருடன் போலீசார் சி.சி.கேமிரா காட்சிகளின் ஆதாரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சித்தூர் மட்டுமின்றி ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Poorni

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

9 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

11 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

11 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

12 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

12 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

13 hours ago

This website uses cookies.