திருப்பதி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஈரோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த வினோத் என்பவர் குடும்பத்துடன் நேற்று குடும்பத்துடன் காளஹஸ்திக்கு வந்து சாமி கும்பிட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
அந்த கார் திருப்பதி சமீபத்தில் இருக்கும் மலலாவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 30 வயது சரண்யா மற்றும் 12 வயது மிதுன் ஆகியோர் பரிதாபமாக மரணமடைந்தனர்.
வினோத் மற்றும் அவருடைய தாய் தந்தையர் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து பற்றிய தகவல் அறிந்த ஏற்பேடு போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மரணம் அடைந்த இரண்டு பேரின் உடல்களும் திருப்பதி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிள் வைக்கப்பட்டுள்ளன.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.