மலைப்பாதையில் கிடு, கிடு பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தேவரகொண்ட மலை மீது சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு அனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் உமாபதி சாமி கும்பிடுவதற்காக சென்று இருந்தார்.
சாமி கும்பிட்டு திரும்பும் போது அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து வேகமாக ஓடி கிடு கிடு பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.
மலைப்பாதையின் மேல் பகுதியில் இருக்கும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கிய கார் சுமார் நூறு அடிக்கு கீழ் இருக்கும் சாலை மீது விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் தலைமை ஆசிரியர் உமாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார். விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் கார் கவிழ்ந்த போது பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மரணம் அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் உமாபதி உடல் அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.