ஆந்திரா : மாநிலம் நெல்லூர் அருகே மகிளா தினம் என்று வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
லித்துவேனியா நாட்டை சேர்ந்த கரோலினா என்பவர் லித்துவேனியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் பேருந்தில் பெங்களூர் புறப்பட்டு சென்றார். அப்போது அவரிடம் இந்திய பணம் இல்லாத நிலையில் டாலர்களில் டிக்கெட் கட்டணத்தை செலுத்த முயன்றார்.
பேருந்து நடத்துனர் அவர் கொடுத்த வெளிநாட்டு பணத்தை வாங்க மறுத்து விட்டார்.அப்போது அதே பேருந்தில் பயணித்த நெல்லூரை சேர்ந்த சாய்குமார் என்பவர் கரோலினாவுக்கு உதவும் வகையில் டிக்கெட் எடுக்க பணம் கொடுத்தார்.
இரண்டு பேரும் பெங்களூர் சென்ற நிலையில் அங்கு சாய்குமார் வாகன உதிரிபாகங்களை கொள்முதல் செய்தார். தேவையான அளவு பணம் இல்லாத நிலையில் கரோலினா அவருக்கு தன்னுடைய கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து கொடுத்தார்.
பின்னர் என்னுடைய ஊருக்கு வந்தால் இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கிறேன் என்று கூறி கரோலினாவை நெல்லூர் அருகே உள்ள தன்னுடைய சொந்த ஊருக்கு சாய்குமார் அழைத்து வந்தார்.
நேற்று காலை சாய்குமார் வீட்டில் கரோலினா குளித்து, உடை மாற்றிக் கொண்ட பின் அவரை பெங்களூரில் வழியாக கோவாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சாய்குமார் அழைத்து சென்றார்.
இந்த நிலையில் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சாய்தாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது தன்னுடைய நண்பர் சையத் என்பவருக்கு போன் செய்து அவரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சாய்குமார் வரவழைத்தார்.
சாய்தாபுரம்,ராப்பூர் இடையே கரோலினாவை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கிய இரண்டு பேரும் அவரை தூக்கி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது கரோலினா போட்ட சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றினர்.
இதுபற்றி கரோலினா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சில்லகூறு அருகே சாய்குமார்,சையத் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மகளிர் தினம் அன்று வெளிநாட்டு இளம்பெண் ஒருவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற இரண்டு பேரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஏற்பட்டுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.