தனியார் மருத்துவமனைகளில் ₹250 விலையில் கொரோனா தடுப்பூசி..! மத்திய அரசு உத்தரவு..!
27 February 2021, 7:17 pm60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட தீவிர உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் போடும் தடுப்பூசிகளின் விலையை மத்திய அரசு ரூ 250 என நிர்ணயித்ததாக கூறப்படுகிறது.
இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் மார்ச் 1 முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
“அரசு மையங்களில் தடுப்பூசி வழக்கம் போல் இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி பெற விரும்புவோர் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் கலந்துரையாடுவதால் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை 3-4 நாட்களுக்குள் சுகாதார அமைச்சகத்தால் முடிவு செய்யப்படும்.” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், “ஆதாரங்களின்படி, தடுப்பூசிகளின் விலை ரூ 250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதிற்கு மேற்பட்ட தீவிர உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும்.” என்று மத்திய அரசு தற்போது வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், அடுத்த கட்ட தடுப்பூசி இயக்கம் 10,000 அரசு மற்றும் நாடு முழுவதும் 20,000’க்கும் மேற்பட்ட தனியார் தடுப்பூசி மையங்களில் நடத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த 250 ரூபாயும், தடுப்பூசிகளை விநியோகிப்பதில் உள்ள செலவுகளை ஈடுகட்ட மட்டுமே என்றும், தடுப்பூசிக்கான விலையை அரசே ஏற்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0
0