முதலமைச்சரின் சகோதரியை போலீசார் கைது செய்துள்ளதாக அரசியல் கட்சியனரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஷர்மிளா ஒய் எஸ் ஆர் தெலுங்கானா பார்ட்டி என்ற பெயரில் தெலுங்கானாவில் அரசியல் கட்சி நடத்தி வருகிறார்.
அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தற்போது அவர் தெலுங்கானா முழுவதும் பாதயாத்திரை செய்து வருகிறார்.
தெலுங்கானா மாநிலம் மகாபூபாபாத்தில் முகாமிட்டிருந்த அவர் அங்கு நேற்று பாதையாத்திரை மேற்கொண்டார்.
ஷர்மிளாவை வரவேற்று ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சியினர் அமைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள், கட்டவுட்டுகள் ஆகியவற்றை ஆளும் பாரதிய ராஷ்டிய சமாதி கட்சி தொண்டர்கள் நேற்று இரவு சேதப்படுத்திவிட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இரண்டு கட்சி தொண்டர்களும் மோதி கொள்ளும் வகையில் பதட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்மிளாவின் பாதயாத்திரைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை இன்று காலை போலீசார் திடீரென்று ரத்து செய்து சர்மிளாவுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் சர்மிளா பாதயாத்திரை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று கூறினார்.
எனவே அவரை கைது செய்த போலீசார் தற்போது ஹைதராபாத்திற்கு அழைத்து செல்கின்றனர்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.