ஆந்திரா: ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளின் கவுன்சிலர்களிடையே கடும் மோதல். நாற்காலி வீச்சு.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் கொண்ட பள்ளி நகராட்சி அலுவலகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அப்போது ஆளும் கட்சி ஆன ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி தெலுங்கு தேசம் கவுன்சிலர்கள் மீது நாற்காலி மற்றும் கற்கள் ஆகியவற்றை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
போலீசாரின் சமாதான முயற்சியை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். இந்த மோதல் பற்றி வழக்குப்பதிவு செய்து ஆளும் கட்சி கவுன்சிலர்களை கைது செய்ய வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.