கிரிக்கெட் விளையாடும் போது மோதல்.. ஒரு தரப்பு மாணவர்களை விரட்டி சென்று பேட்டால் தாக்கிய கொடூரம் : அதிர்ச்சி வீடியோ!!

அன்னமைய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் போது பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவனை சக மாணவன் பேட்டால் அடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்று கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரு தரப்புக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் மற்றொரு தரப்பை சார்ந்த மாணவர்கள் மீது கிரிக்கெட் பேட்டை பயன்படுத்தி தாக்குதல் நடத்த துவங்கினர்.

ஒரு மாணவனை மட்டும் மற்ற தரப்பினர் குறி வைத்து தாக்கியதால் அந்த மாணவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அவனை விடாமல் விரட்டி சென்ற மாணவர்கள் கிரிக்கெட் பேட்டால் தாக்கினர்.

அப்போது கீழே விழுந்த மாணவனை ஒரு மாணவன் கிரிக்கெட் பேட்டால் தலையில் தாக்க முயன்றான். இந்த நிலையில் அங்கிருந்து கல்லூரி வளாகத்துக்குள் தப்பி ஓடிய மாணவனையும் தாக்குதல் நடத்திய மாணவர்கள் கும்பல் விரட்டி சென்றது.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் இது பற்றி யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த மோதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி போலீசார் கவனத்திற்கும்,கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சென்றது.

எனவே இன்று போலீசரும், கல்வித் துறை அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கான காரணம் பற்றியும், மாணவனை கிரிக்கெட் பேட்டால் தாக்கியது யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.