தனியார் நிறுவனத்திடம் இருந்து மாதாமாதம் பணம் பெற்றதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமானது, கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) என்ற தனியார் நிறுவனத்துடன், தகவல் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் ஆலோசனை மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்க தொழில் ரீதியாக ஒப்பந்தம் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், எந்த சேவையும் வழங்கப்படாமலேயே மாதா மாதம் பணம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தில் இருந்து எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.3 லட்சமும், வீணா விஜயனுக்கு ரூ.5 லட்சமும் ஒவ்வொரு மாதமும் பணம் வந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம், கடந்த 3 ஆண்டுகளில் மாதத் தவணையாக ரூ.1.72 கோடி பெற்றதாக சொல்லப்படுகிறது.
வீணா விஜயன் நிறுவனத்திற்கும், சிஎம்ஆர்எல் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தியதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்தன.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் தனியார் நிறுவனத்திடம் இருந்து 1.7 கோடி ரூபாய் அளவுக்கு சந்தேகத்திற்குரிய நிதிப் பரிவர்த்தனை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது கேரள அரசியலில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.