பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ள நிலையில், டெல்டா மாவட்ட மக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது குறித்த அறிவிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளான வடசேரி, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு ஆகிய 3 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் டெல்டா மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக, தமிழக பாஜகவினரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேவேளையில், தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே, மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்தார். தங்களின் கோரிக்கை மனு குறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி அளித்ததாகவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்றென்றும் துணை நிற்கும் என அண்ணாமலை கூறினார்.
இந்த நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். இந்த சூழலில், காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்கள் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள். தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்,” என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த அறிவிப்பால் காவிரி டெல்டா பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.