பண மோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அண்மையில் ஜார்க்கண்ட்டில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1000 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜரானார். அப்போது, அரசியல் சாசன ரீதியிலான பொறுப்பை வகித்து வந்தாலும், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பண மோசடி வழக்கில், ஆகஸ்ட் 14ம் தேதி விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
தற்போது எதிர்க்கட்சி தலைமையிலான “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹேமந்த் சோரன், கடந்த மாதம் நடந்த பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.