இண்டியா கூட்டணிக்குள் குழப்பம்… முக்கிய கட்சிகள் அதிருப்தி : தள்ளிப்போய் கொண்டே இருக்கும் கூட்டம்!!
“இந்தியா” கூட்டணி என்பது லோக்சபா தேர்தலுக்காக பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியாக உருவாக்கப்பட்டது. “இந்தியா” கூட்டணியும் கிடுகிடுவென ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் “இந்தியா” கூட்டணி கை கழுவப்பட்ட நிலைக்கு போனது. இது கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது.
தற்போது 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானாவில் மட்டும் வென்றுள்ளது. சத்தீஸ்கர்- ராஜஸ்தானில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மிசோரமில் காங்கிரஸை பாஜக முந்திவிட்டது. இந்த நிலையில் திடீரென டிசம்பர் 6-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்களுக்கு ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உடல்நலன் பாதிப்பால் ஜேடியூ தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவித்தார்.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை முழுவீச்சில் முதல்வர் ஸ்டாலின் முடுக்கி விட்டிருப்பதால் டெல்லி கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இதனையடுத்து டெல்லியில் நாளை நடைபெற இருந்த “இந்தியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில் “இந்தியா” கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 18-ந் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், டிசம்பர் 17-ந் தேதி அடுத்த “இந்தியா” கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதனால் “இந்தியா” கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 17 அல்லது டிசம்பர் 18 என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.