மேற்கு வங்க மாநில அரசுக்காக ஆஜராக வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை அக்கட்சியைச் சேர்ந்த சக வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் சவுத்ரி மீது மெட்ரோ டைரிக்களை குறைந்த விலையில் விற்பனை செய்ததாக, அம்மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் அதிர் சவுத்ரிக்கு எதிராகவும், மேற்கு வங்க அரசின் சார்பாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கொல்கத்தா நீதிமன்றத்திற்கு ஆஜராவதற்காக வந்தார்.
அப்போது, காங்கிரஸ் சட்ட வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த கவுஸ்தவ் பக்ச்சி, மற்றும் மற்றொரு பெண் வழக்கறிஞரான சுமித்ரா நியோகி ஆகியோர், ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Go back சிதம்பரம் என்றும், மம்தா பானர்ஜியின் தரகர் என்றும் சரமாரியாக கோஷங்களை எழுப்பியவாறு, சிதம்பரத்தின் காரை மறித்து போராட்டம் நடத்தினர். பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் நீதிமன்றத்தில் இருந்தவர்களை மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியினரிடையேயும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.