பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட காங்., எம்பி : பாஜக கடும் எதிர்ப்பு… முதலமைச்சர் விளக்கம்!
கர்நாடகத்தில் மாநிலங்களவை தோ்தலில் காங்கிரஸ் வேட்பளார் நசீர் உசேன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை பெங்களூரு விதான சவுதாவில் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
அதில் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்து தீவிரமாக போராட்டத்தை நடத்தியது.
மத்தியமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நபரை கைது செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். என்றார்.
இந்தநிலையில் முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பெங்களூரு விதான சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக புகார் எழுந்துள்ளது.
இதை பா.ஜ.க மட்டுமின்றி ஊடகங்களும் கூறுகின்றன. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது தொடர்பான குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரையும் தப்ப விடமாட்டோம் என கூறியுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.