காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட 120 பேரின் ஆபாச படங்களை காங்கிரஸ் தலைவர் சிவகுமாரிடம் இருப்பதாக பாஜக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கடந்த 21ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி கர்நாடகாவின் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது பலாத்காரம் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு பின்பு, சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
முதலில் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை எனக் கூறி வந்த ரமேஷ் ஜார்கிகோளி, பின்னர், இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததை ஒப்புக் கொண்டார். மேலும், அந்தப் பெண்ணுக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்றும், இளம்பெண்ணின் சம்மதத்துடன் தான் நெருக்கமாக இருந்ததாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார் என கூறப்படுகிறது. இது ஆபாச வீடியோ விவகார வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஹனிடிராப் முறையில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில், அவரை சிக்க வைத்திருப்பது விசாரணையில் உறுதியானது.
இளம்பெண்ணின் நண்பர்கள் ரமேஷ் ஜார்கிகோளியிடம் வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டி பல கோடி ரூபாய் பணம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீடியோ எடுத்தது யார்?, என்ன காரணத்திற்காக பையில் கேமராவை வைத்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு இளம்பெண் பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. பெயரை குறிப்பிட்டு (எம்.எல்.ஏ. லட்சுமி ஹெப்பால்கர்), இவரால் தான் டி.கே. சிவகுமாருடனான தனது தொடர்பு பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் உள்பட 120 பேரின் இதுபோன்ற ஆபாச சி.டி.க்களை சிவகுமார் தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் ஜார்கிகோளி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இதனால், சொந்த கட்சியிலேயே உள்ள பலரை தனது கட்டுக்குள் வைத்திருக்க ஆபாச பட சி,டி.க்களை தயாரித்து வைத்திருக்கிறார் என ரமேஷ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போதே, காங்கிரஸ் தலைவர் சிவகுமார், ரூ.40 லட்சம் செலவு செய்து, தன்னை ஹனிடிராப் மூலம் இதில் சிக்க வைத்துள்ளார் என்றும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ரமேஷ் ஜார்கிகோளி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.