காங்., கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்.. மீண்டும் பிரதமராக மோடிதான் ஆட்சி செய்வார் : அமித்ஷா உறுதி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் பேரணிக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் நடந்த 42,000 உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள். எங்களது அரசு முழுக்க ஊழலை ஒழிக்க அடித்தளம் இட்டு இருக்கிறது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களை மோடி தான் ஆட்சியில் இருந்து நீக்கினார். ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க பிரதமர் மோடி வலுவான அடித்தளம் இட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரை கடந்த முப்பது ஆண்டுகளாக மூன்று குடும்பங்கள் ஆட்சி செய்துள்ளன. 370 அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

தீவிரவாதத்திற்கு 42,000 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். ஆனாலும், சட்டப்பிரிவு 370 அமலில் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, பிடிஎப் தலைவர் மெஹ்பூபா முப்தியை பார்த்துக் கேட்கிறேன், 42,000 பேர் உயிரிழந்து இருப்பதற்கு யார் பொறுப்பேற்பார்கள்.

அவர்கள்தானே அப்போது ஆட்சியில் இருந்தார்கள். மோடி ஆட்சியின் கீழ் தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட்டுள்ளது. 300 இடங்களைப் பிடித்து மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.