பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடி வந்தார்.
நேற்றிரவு அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், உடல் எடை அதிகரித்துள்ளதால் இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
50 கிலோவை விட 100 கிராம் எடை கூட இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக பாரீஸ் ஒலிம்பிக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த நபர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்திய அரசு இந்த முடிவுக்கு எதிராக போராட வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது.தகுதி நீக்கத்திற்கு பின்னால் சதி இருப்பதாக முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு நீதி கேட்டு இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் மகார் த்வாரில் நின்றபடி குரல் எழுப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் அவைக்குள்ளும் எதிரொலித்தது. வினேஷ் போகத் காலிறுதியில் 82 முறை தோல்வியடையாத வீராங்கனையை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.