ஆந்திரா : நெல்லூரில் இருந்து திருப்பதி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி 15 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் இருந்து திருப்பதி நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மனுபோலு பத்வேல் கிராஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென டயர் பஞ்சர் ஆனதால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரியும் பேருந்து மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து சமயத்தில் பேருந்தில் 22 பேர் பயணம் செய்த நிலையில் கோவூர் மண்டலம் ரேகுண்டபாடு பகுதியைச் சேர்ந்த எஸ்.கே சலீமா (வயது 65) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மனுபோலு எஸ்.ஐ முத்தியால் ராவ் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நெல்லூர் மற்றும் கூடூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.