கான்பூர்: இந்தியாவில் கொரோனா 4வது அலை ஜூன் மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக ஐஐடி விஞ்ஞானிகள் கணித்து அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த 2020ம் ஆண்டு முதல் அலையாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதன்பின்னர் கடந்த 2021ம் ஆண்டு 2வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.
இதற்கு டெல்டா கொரோனா வகை அடிப்படையாக அமைந்திருந்தது. அதன்பின், டெல்டா பிளஸ், ஒமிக்ரான் ஆகிய வகைகளாலும் பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் அதிவேக பரவல் கொண்டிருந்தது. இருப்பினும், உயிரிழப்புகள் அதிக அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோன பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கொரோனா 4வது அலை பற்றிய கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதுபற்றி ஐ.ஐ.டி. கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்தியாவில் கொரோனா 4வது அலையானது வருகிற ஜூன் 22ம் தேதி தொடங்கி அக்டோடபர் 24ம் தேதி வரை நீடிக்கும். எனினும், புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப4வது அலையின் கடுமை அமையும்.
4வது அலை பரவல் தோன்றினால், அது 4 மாதங்கள் வரை இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த அலையானது ஆகஸ்டு 15ம் தேதி முதல் ஆகஸ்டு 31ம் தேதி வரை உச்சமடையும். அதன்பின்னர் குறைய தொடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் கொரோனா அலை பற்றி 3வது முறையாக ஐ.ஐ.டி. கான்பூர் கணித்து வெளியிட்டுள்ளது. அவற்றில் குறிப்பிடும்படியாக, 3வது கொரோனா அலை பற்றி வெளியான கணிப்பு ஒரு சில நாட்கள் தள்ளி சென்றது தவிர்த்து, துல்லியமுடன் அமைந்திருந்தது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.