முன்னாள் முதலமைச்சர் பல நூறு கோடி ஊழல் புகார் கூறியுள்ள நிலையில் அது தொடர்பான ஆவணங்கள் சிஐடி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலாகியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக பொறுப்பிற்கு வந்த அறங்காவலர் குழுவினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் திருடப்பட்ட குற்றத்திலும் நடவடிக்கை என்ற பெயரில் பொறுப்பில் இருந்தவர்கள் புகுந்து விளையாண்டு விட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிலையில் குற்றச்சாட்டுகள் பற்றி ஆந்திர சிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு இடையே திடீரென்று இன்று இரவு எட்டு மணி அளவில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் பொறியாளர் பாஸ்கர் சேம்பரில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தில் தேவஸ்தான துணை கோவில்கள் மற்றும் சாலைப் பணிகள் ஆகிவை தொடர்பான பைல்கள் எரிந்து சாம்பலாகி விட்டன. தீ விபத்தை கவனித்த பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் கட்டிடத்தில் இருக்கும் தானியங்கி தீ அணைப்பு உபகரணங்களை பயன்படுத்தி உடணடியாக தீயை கட்டுப்படுத்தி அனைத்தனர். இதனால் ஏற்பட இருந்த பெரும் தீ விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே அங்கு வந்து சேர்ந்த தேவஸ்தான முதன்மை சேர்ந்த முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தீவிபத்து நடந்த பொறியாளர் பாஸ்கர் சேம்பரை ஆய்வு செய்து பின்னர் போலீசில் புகார் அளித்தனர்..
தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்து பற்றிய செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதர் தேவஸ்தானத்தின் அனைத்து பைல்களும் ஈ ஃபைல்களாக தேவஸ்தான சர்வரில் பாதுகா உள்ளன. எனவே பைல்கள் தீ விபத்தில் எரிந்து போய் இருக்குமோ என்ற அச்சம் தேவையில்லை . ஆனாலும் அனைத்து கோலங்களிலும் விசாரணை நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.