உத்தரப்பிரதேசம்: பாக்பட் நகரை சேர்ந்த தம்பதிகள் பேஸ்புக் நேரலையில் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாக்பட் நகரத்தைச் சேர்ந்தவர் தோமர்(40). இவர் ஷூ கடை நடத்தி வருகிறார். வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டதால் அதிகப்படியான கடன் சுமைக்கும் இவர் ஆளானார். இந்நிலையில் பேஸ்புக்கில் லைவ் வீடியோ எடுத்தபடி தனது மனைவியுடன் விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இந்த முயற்சியின் போது இவரது மனைவி விஷத்தை தட்டிவிட முயன்றுள்ளார். ஆனாலும் இருவரும் ஒருகட்டத்தில் கண்ணீர் சிந்தியபடி விஷத்தை உட்கொண்டனர். பேஸ்புக்கில் நேரலையில் இவர் விஷமருந்திய 2 நிமிட வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் , ‘நான் பேசுவதற்கு முழு சுதந்திரமும் இருக்கிறது. எனக்கு கடன்கள் இருந்தாலும் அதை நான் நிச்சயம் திருப்பி செலுத்திவிடுவேன். இறந்தே போனாலும் எனது கடனை நான் செலுத்துவேன். நான் ஒன்றும் இந்த தேசத்திற்கு எதிரானவன் கிடையாது.
இந்த தேசத்தின் மேல் எனக்கும் பற்றுள்ளது. பிரதமர் மோடியிடம் நான் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். ஆம் நீங்கள் விவசாயிகளுக்கும், சிறு குறு தொழிலாளர்களுக்கும் நலம் விரும்பியாக இருக்கவில்லை. தயவு செய்து உங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள். தயவு செய்து இந்த வீடியோவை அனைவரும் பகிருங்கள்’ இவ்வாறு அவர் பேசினார்.
விஷமருந்தியவர்களில் மனைவி பூனம் தோமர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தோமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். பேஸ்புக் நேரலையில் தம்பதியின் இந்த தற்கொலை முயற்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.