2வது திருமணம் செய்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் : விசாரணையில் புதிய தகவல்கள்!!!

மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது. குண்டுவெடிப்புக்கு பின்னர் நாட்டை விட்டு தப்பியோடிய அவர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார் என கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

அவரது சகோதரி ஹசீனா பார்க்கர். இந்தியாவிலேயே வசித்து வந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். அவரது மகன் அலிஷா இப்ராகிம் பார்க்கர். இவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது.

அதில் பல தகவல்கள் வெளிவந்து உள்ளன. இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில் அப்துல்லா காஜி பாபா தர்கா அருகே ராணுவ குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.

இப்ராகிம் தனது முதல் மனைவி மெஹ்ஜாபீனை விவாகரத்து செய்யாமலேயே, 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனால், மெஹ்ஜாபீன் மும்பையில் உள்ள தனது உறவினர்களிடம் தொடர்பிலேயே இருந்து வருகிறார்.

அவரை துபாயில் வைத்து கடந்த ஆண்டு சந்தித்தேன் என அலிஷா கூறியுள்ளார். 2-வது மனைவி, பதான் வம்சாவளியை சேர்ந்தவர். இந்த பதான் பிரிவினர் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் வசிப்பவர்கள்.

ஈரானிய பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் காயமடைந்தனர்.

டி கம்பெனி என்ற பெயரிலான சர்வதேச பயங்கரவாத இயக்கம் ஒன்றை நடத்தி வருவதற்காக தாவூத் இப்ராகிம், அவரது கூட்டாளி சோட்டா சகீல் மற்றும் 3 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.