தலீத் சிறுவனை சாதியைச் சொல்லித் திட்டி, கால்களை நக்கச் செய்த கொடூரம் நடந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் சுமார் 2 நிமிடம் 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தலீத் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை 5 அல்லது 6 பேர் கொண்ட கும்பல் அடித்து துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
மேலும், அடியால் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கும் அந்த நபரை, வாகனத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கால்களை நக்கச் செய்தது பார்ப்போரை கொந்தளிக்கச் செய்யும் வகையில் இருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் நடந்தது என்றும், இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட தலீத் சிறுவன் 10ம் வகுப்பு படித்து வந்ததாகவும், கணவனை இழந்த தாயுடன் வசித்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், சித்ரவதை செய்த நபர்களில் ஒருவரின் வயலில் அந்த நபரின் தாயார் வேலை செய்ததாகவும், அதற்கு ஊதியம் கேட்கச் சென்ற சிறுவனை, அவர்கள் கொடுமைப்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.