தயாநிதி மாறன் பேச்சால் INDI கூட்டணியில் புகைச்சல் : பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்!!!

தயாநிதி மாறன் பேச்சால் INDI கூட்டணியில் புகைச்சல் : பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்!!!

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த பேச்சை பாஜக திரித்து, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்வோம் என பேசியதாக பரப்பியது. இது வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்களும் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வட இந்திய மாநிலங்களை திமுக எம்பி செந்தில் குமார், கவ் மூத்ரா மாநிலங்கள் என நாடாளுமன்றத்தில் விமர்சித்தது சர்ச்சையானது. இதனை திமுக தலைமையே ரசிக்காததால் உடனே செந்தில்குமார் எம்பி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் டெல்லியில் 19-ந் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், டிஆர் பாலு எம்பி ஆகியோர் இந்தி மொழி பெயர்ப்பை கேட்டதற்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்தி தான் தேசிய மொழி; இது இந்துஸ்தான் என்றெல்லாம் ஆவேசப்பட்டார் நிதிஷ்குமார்.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பாஜக தலைவர்களுடன் சேர்ந்து “இந்தியா” கூட்டணி கட்சித் தலைவர்களே தயாநிதி மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தயாநிதி மாறனின் விமர்சனம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: திமுக என்பது கருணாநிதியின் கட்சி. திமுக என்பது சமூக நீதியில் நம்பிக்கை உள்ள கட்சி. அந்த கட்சியின் தலைவர்கள் உ.பி, பீகார் மாநில மக்கள் பற்றி ஏதேனும் பேசியிருந்தால் அது கண்டனத்துக்குரியது. நாங்கள் அதை ஏற்க முடியாது.

உத்தரப்பிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்களின் தேவை நாடு முழுவதும் இருக்கிறது. அப்படியான நிலையில் உ.பி, பீகார் தொழிலாளர்களை விமர்சித்தால் நாங்கள் கண்டனம் தெரிவிப்போம். இத்தகைய கருத்துகளை தெரிவிக்காமல் அனைத்து கட்சித் தலைவர்களும் தவிர்க்க வேண்டும். பீகார் மாநில மக்கள் இதர மாநில மக்களை மதிக்கிறோம். ஆனால் இத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

19 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

20 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

20 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

21 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

22 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

22 hours ago

This website uses cookies.