நாட்டை உலுக்கிய டெல்லி வணிக வளாக தீ விபத்து…பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு: 40 பேருக்கு பலத்த தீக்காயம்…தலைவர்கள் இரங்கல்..!!

டெல்லி : டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இருக்கும் முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்த தகவல் அறிந்த 20 தீயணைப்பு துறையினர் இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடி உள்ளனர்.

4 மாடி கட்டிடத்தில் முதலில் முதல் தளத்தில் மட்டும் தீ ஏற்பட்டுள்ளது. அதன்பின் வேகமாக தீ பரவி 2, 3 மற்றும் 4வது மாடியிலும் தீ பரவி உள்ளது. முதல் தளத்தில் சிசிடிவி உற்பத்தி மற்றும் மற்றும் வைபை உற்பத்தி மையம் அமைந்துள்ளது. இங்குதான் முதலில் தீ ஏற்பட்டு உள்ளது. முதலில் மெதுவாக பரவிய தீ நேரம் செல்ல செல்ல வேகமாக பரவியது. தீ பரவியது முதலில் 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயன்று முடியாமல் போனது.

இதனால் மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. இதனால் மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் இணைந்து போராடி இரவு நேரத்தில் தீயை அணைத்தனர். இதையடுத்து சேதம் அடைந்த கட்டிடத்தில் இருந்து மக்கள் மீட்கப்பட்டனர். 27 பேர் பலி 27 பேரின் உடல் இதுவரை முதல் இரண்டு தளங்களில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 68 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதில் தீவிர தீக்காயங்களுடன் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் உடல்கள் வரலாம் இதில் மூன்றாவது மாடியில் இருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதல் தளத்தில் கடைகள் வைத்து இருந்த இரண்டு நிறுவனங்களின் ஓனர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடுமையாக காயம் அடைந்த நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இரங்கல் பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு சார்பாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

UpdateNews360 Rajesh

Recent Posts

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

18 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

1 hour ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

1 hour ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

2 hours ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

2 hours ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

2 hours ago

This website uses cookies.