வங்கி கணக்கில் இருந்து ₹.65 கோடி பிடித்தம் : வருமான வரித்துறை வைத்த செக்.. கடுப்பில் காங்கிரஸ்!!

வங்கி கணக்கில் இருந்து ₹.65 கோடி பிடித்தம் : வருமான வரித்துறை வைத்த செக்.. கடுப்பில் காங்கிரஸ்!!

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 16ம் தேதி அதிரடியாக முடக்கியது.2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகவும், அதற்கு அபராதமாக ரூ.210 கோடி செலுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது.

இதில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள கிரவுட் ஃபண்டிங் வங்கி கணக்கும் அடங்கும். வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் மட்டுமல்லாது பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனம் செய்திருந்தன.

இது குறித்து அக்கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன், “வருமான வரித்துறையின் நடவடிக்கையால் எங்களால் மின் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாது பாரத் ஜடோ யாத்திரை போன்ற அரசியல் நடவடிக்கைகள் இதன் மூலம் முடங்கும்” என்று கூறியிருந்தார்.

தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் தடை செய்த அடுத்த நாளில் வருமான வரித்துறை இந்த நடவடிக்கை எடுத்திருப்பதால், இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்று காங்கிரஸ் காட்டமாக விமர்சித்திருந்தது. இந்நிலையில், முடக்கப்பட்ட காங்கிரஸின் வங்கி கணக்கிலிருந்து ரூ.65 கோடியை வருமான வரித்துறை பிடித்தம் செய்திருக்கிறது.

காங்கிரஸின் மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60.25 கோடி டிமாண்ட் டிராப்ட்களாக எடுக்கப்பட்ட நிலையில், இந்திய இளைஞர் காங்கிரஸின் கணக்குகளில் இருந்து ரூ.5 கோடி எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, வருமான வரித்துறையின் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ், வருமான வரி தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இது தொடர்பாக அடுத்த வழக்கு விசாரணை வரும் வரையில் வங்கிக்கணக்குகள் செயல்படலாம் என்று தீர்ப்பாயம் கூறியிருந்தது. இப்படி இருக்கும்போது வருமான வரித்துறை தன்னிச்சையாக ரூ.65 கோடியை பிடித்தம் செய்தது ஏன் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.